• Download mobile app
22 Apr 2025, TuesdayEdition - 3359
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் 34 பேர்

February 21, 2017 தண்டோரா குழு

கோவையில் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் இது வரை 34 பேர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கோவை பாப்பகாய்ச்சன் பாளையம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் . இவர் சில தினங்களுக்கு முன் உடல் நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவருக்குப் பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதையடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு அவர் உயிரிழந்தார்.

கடந்த சில தினங்களாக கோவையில் பல்வேறு பகுதியிலிருந்து பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் கோவை அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். தற்போது வரை பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் 34 பேரும், டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 7 பேரும், மர்ம காய்ச்சல் காரணமாக 24 பேரும் சேர்க்கப்பட்டுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கோவையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் தற்போது வரை 17 பேர் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் பலியாயினர். கடந்த ஒரே வாரத்தில் மட்டும் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் 5 பேர் பலியான சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“அண்மைக் காலமாக கோவையில் மர்மமான காய்ச்சல்கள் வேகமாகப் பரவி வருகின்றன. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். திடீரென காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும்” என அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பொதுமக்களுக்கு வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க