• Download mobile app
28 Apr 2025, MondayEdition - 3365
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பயிர்க்காப்பீடு, உழவர் கடன் அட்டை பெற சிறப்பு முகாம்கள் ஆட்சியர் அறிவிப்பு

April 23, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டம் முழுவதும் அனைத்து கிராம பஞ்சாயத்துக்களிலும் வேளாண்மை மற்றும் சகோதர துறைகளின் மூலம் வரும் 24-ம் தேதி முதல் 1-ம் தேதி வரை ஒரு வாரத்திற்கு ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து நடத்தும் \”சிறப்பு விவசாயிகளின் பங்களிப்பே எமது முன்னுரிமை\” என்கிற முகாம்கள் நடைபெறவுள்ளன.

ஒரு வாரகாலத்திற்கு நடைபெறும் இச்சிறப்பு முகாம்களில் வேளாண்மை துறையினால் நடத்தப்படும் முக்கிய திட்டங்களான பயிர்க்காப்பீடு,உழவர் கடன் அட்டை, மண் மாதிரிகள் சேகரித்தல் மற்றும் நுண்ணீர் பாசனத் திட்டம் குறித்த விரிவான விளக்க காட்சிகள் கருத்தரங்குகள் மற்றும் செயல் விளக்கங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளன. இம்முகாம்களில் உழவர் கடன் அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படவுள்ளன.

மேலும் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் முக்கிய அம்சங்களான விவசாயிகள் காப்பீடு செய்திடும் வழிமுறைகள், காப்பீடு பெற தகுதிகள், இழப்பீட்டிற்கான காரணிகள், இழப்பீடு கணக்கிடும் முறை, காப்பீடு விண்ணப்பத்தின் தற்போதைய நிலையினை அறிய கூடிய வழிவகைகள், புகார்கள் மற்றும் சந்தேகங்கள் ஆகியவற்றிற்கான வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு விரிவான விளக்கங்கள் வழங்கப்படவுள்ளன.

எனவே கிராம பஞ்சாயத்து அளவில் நடைபெறக்கூடிய இம்முகாம்களில் விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் படிக்க