• Download mobile app
29 Apr 2025, TuesdayEdition - 3366
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பல்லுக்கு கட்டின கம்பி வயிற்றுக்குள் இருந்து அகற்றம்

August 9, 2017 தண்டோரா குழு

ஆஸ்திரேலியாவில் பெண்ணின் வயிற்றிலிருந்து 10 ஆண்டுகளுக்கு பிறகு, கம்பியை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் வெளியே எடுத்துள்ளனர்.

ஆஸ்திரேலியா, பெர்த் நகரில் வசிக்கும் 30 வயது பெண், 1௦ ஆண்டுகளுக்கு முன் கோணலான தனது பற்களை சீராக்கும் சிகிச்சை பெற்றுள்ளார். அதற்கு பல் கம்பிகளை பயன்படுத்தியுள்ளார்.

சமீபத்தில் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனே அருகிலிருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பித்தப்பையில் தான் வலி ஏற்பட்டுள்ளது என்று எண்ணியுள்ளனர். அந்த வலியை குறைக்க மருந்துகளை தந்துள்ளனர்.

ஆனால் வலி குறையாததையடுத்து, மீண்டும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவர்கள் சி.டி.ஸ்கேன் எடுத்தனர். ஸ்கேன் முடிவுகளை பார்த்தபோது, அவருடைய சிறு குடலில் கம்பியிருப்பதை கவனித்து உள்ளனர்.

இதனை அடுத்து அந்த பெண்ணிற்கு அறுவை சிகிச்சை மூலம் சிறு குடலிலிருந்த சுமார் 2.8 அங்குலம் நீளமுள்ள கம்பி அகற்றப்பட்டது.

மேலும் படிக்க