• Download mobile app
22 Apr 2025, TuesdayEdition - 3359
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாகிஸ்தானில் நிலநடுக்கம் 6.3 ரிக்டர் அளவு பதிவு

February 8, 2017 தண்டோரா குழு

பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் புதன்கிழமை (பிப்ரவரி 8) ஏற்பட்டது. இது 6.3 ரிக்டர் அளவுகோலாகப் பதிவாகியுள்ளது.

இது குறித்து அமெரிக்க நாட்டின் புவியியல் ஆய்வு நிலைய அதிகாரி கூறியதாவது:

“பாகிஸ்தான் நாட்டின் அரேபிய கடற்கரைப் பகுதியில் புதன்கிழமை அதிகாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள க்வாதார் துறைமுகத்திற்கும் பலுசிஸ்தான் மாகாணத்தின் பஸ்னி நகருக்கு இடையே மையம் கொண்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் துர்பாத் என்னும் நகரின் தென் பகுதி 9௦ கிலோமீட்டர் தூரத்தில் 1௦ கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. இது ஆரம்பத்தில் 6.6 ரிக்டராக இருந்திருக்கும் என்று கருதப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச் சேதமோ பொருட்சேதமோ ஏற்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பஸ்ன நாட்டின் மக்கள் தொகை 400,000 ஆகும். நிலநடுக்கம் ஏற்படும் பகுதியில் பாகிஸ்தான் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. 2௦13ம் ஆண்டு பலுசிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கத்தில் 1,2௦௦ பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க