• Download mobile app
18 Oct 2024, FridayEdition - 3173
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாம்புகளைப் பற்றி நாம் கேள்விப்பட்ட கதைகள் 90% சதவீதம் கட்டு கதைகள் !

July 16, 2024 மு, சிராஜ்தீன் - WNCT

உலகம் முழுவதும் ஜூலை 16ம் தேதி உலக பாம்புகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது பாம்புகள் ஊர்வன வகையைச் சேர்ந்த ஒரு உயிரினம் ஆகும்.பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. ஆனால் பெரும்பாலன பாம்புகள் விஷத்தன்மை அற்றவை என்பது ஆயிவில் நிருபிக்கப்பட்டுள்ளது.

பாம்புகளைப் பற்றி நாம் கேள்விப்பட்ட கதைகள் 90% சதவீதம் கட்டு கதைகள். குறிப்பாக:- சினிமாக்களில் காட்டப்படும் பாம்புகதைகளை நம்பவேண்டாம். உலகம் முழுவதும் 3600 வகையான பாம்புகள் இருக்கின்றன இதில் இந்தியாவில் மட்டும் 230 வகை பாம்புகள் உள்ளன.இதில் 62 வகை பாம்புகள் விஷத்தன்மை கொண்டவையாகும்.இவற்றில் 4 வகை பாம்புகள் அதிம் காணப்படும் விஷத்தன்மை கொண்டவைகள்

இந்தியாவில் பாம்பு- மனித மோதல்கள் அதிகம்.வருடத்திற்கு ஒரு லட்சம் பேர் பாம்புக்கடியால் பாதிக்கப்படுகின்றனர். அதில் 50 ஆயிரம் பேர் பலி ஆகின்றனர். இந்தியாவில் உள்ள 62 விஷப்பாம்புகளில், 4 இனங்கள் மட்டுமே மனித குடியிருப்புகளைச் சுற்றி வாழ்கின்றன. அவை: நல்ல பாம்பு, கட்டு விரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன். பெரும்பான்மையான உயிர்ப்பலிகளுக்கு இந்த நான்கு பாம்புகள் மட்டுமே காரணம். நல்லபாம்பு, கட்டுவிரியன் பாம்புகளின் விஷம் நரம்பு மண்டலத்தை பாதிக்கும். கண்ணாடி, சுருட்டை விரியன் விஷம் ரத்த மண்டலத்தை பாதிக்கும்.

இவைகளுக்கு மட்டுமே விஷமுண்டு . இந்த வகை பாம்புகள் மனிதர்கள் வசிப்பிடங்களைச் சுற்றியும் வாழும் தன்மை கொண்டவை.பெரும்பாலான பாம்புகள் மனிதனைக்கண்டு அஞ்சி ஒதுங்கியே உள்ளன. நாம் அதை சீண்டாத வரை அது யாரையும் தீண்டுவதிலை முதலில் எச்சரிக்கை செய்யும் அதையும் தாண்டிய பின்பே கடிக்க முயல்கிறது. பாம்புகள் மனித நடமாட்டத்தை கண்டால் ஒளிந்து விடும். நமக்கு பாம்புகள் மீது இருக்கும் பயத்தை விட பாம்புகளுக்கு நம்மீது பயம் அதிகம்.

சாரைப்பாம்பு, எலிகளை உணவாக கொள்கிறது. ஒரு எலி வருடத்திற்கு 10 கிலோ தானியங்களை தின்னும். ஒரு சாரைப்பாம்பு வருடத்திற்கு 1000 எலிகள் வரை வேட்டையாடும்.ஒரு சாரைப்பாம்பு வருடத்திற்கு 10 டன் தானியங்களை நமக்கு காப்பாற்றி தருகிறது. பாம்புகளால் மட்டுமே எலிகளின் வளைக்குள் புகுந்து வேட்டையாட முடியும். ‘உயிரியல் பொறி’யாக விவசாயிகளுக்கு நன்மைகளை செய்கின்றன.

பாம்பு கடித்தால் பதட்டப்படாமல் உடனடியாக மருத்துவ மனைக்கு செல்ல வேண்டும். கடித்த இடத்தில் கயிற்றைக் கொண்டு கட்டக்கூடாது. அவ்வாறு கட்டுவதால் அந்த உறுப்பை வெட்டி எடுக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். பிளேடு, கத்தியால் வெட்டி இரத்தத்தை எடுப்பதும், வாயை வைத்து ரத்தத்தை உறிஞ்சுவதும் தவறான வழிமுறை.கடித்த இடத்தை ஆட்டாமல், அசைக்காமல் வைத்துக் கொள்ள வேண்டும்.

பதட்டப்பட்டால் ரத்த ஓட்டம் அதிகமாகி விஷம் வேகமாக பரவும்.விஷப்பாம்பு கடித்தால் டாக்டரின் அறிவுரைக்கு ஏற்ப ‘ஆன்டி ஸ்நேக் வெனம்’ (விஷ முறிவு மருந்து) கொடுக்கப்படும். நல்ல பாம்பு, கட்டு விரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் பாம்புகளில் எது கடித்தாலும் மருத்துவமனைகளில் ஒரே விஷ முறிவு மருந்துதான் கொடுக்கப்படுகிறது.

பாம்புகளை பார்த்தால் பிடிக்கவோ அடிக்கவோ கூடாது உடனே வனத்துறைக்கு தகவல் கொடுக்கவும். வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972ன் படி பாம்புகள் அணைத்தும் சட்டப்பூர்வமாக பாதுகாக்கப் பட்டுள்ளது.அரசின் அனுமதி மற்றும் உரிமம் இல்லாமல் அவற்றை பிடித்தாலோ , அடித்தாலோ,ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு கொன்டு சென்றாலோ அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

மேலும் படிக்க