• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாரம்பரிய சின்னங்களில் கிணறு ஒன்றும் இடம்பெற்றது.

May 2, 2016 தண்டோரா குழு

குஜராத் மாநிலத்தில் உள்ள படன் நகரத்தில், ராணி கி வாவ் என்ற படித்துறை கிணறு அமைந்துள்ளது. ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ, இதை உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவித்து உள்ளது.

இந்தக் கிணறு பதினோராம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பூமிக்கடியில் கட்டப்பட்ட இந்திய கட்டமைப்பு மிகவும் அழகு வாய்ந்த கட்டிட வடிவமைப்பின் சான்று. இந்தக் கிணறு, இந்திய கிணறுகளின் பரிணாம வளர்ச்சியில் மிக முக்கியமான ஒன்று என்று யுனெஸ்கோ அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராஜஸ்தானிய கட்டிடக் கலையில் கட்டப்பட்டு உள்ள இந்தப் பிரமாண்டமான படித்துறை கிணறு கலைநயம் மிக்கது. மேலும், அழகிய சிற்ப வேலைகளுடன் ஏழு அடுக்குகளைக் கொண்டது.

வெள்ளம் மற்றும் புவியியல் மாற்றத்தினால் சரஸ்வதி நதி மறைந்து போயிற்று. இந்தக் கலை அழகு கொண்ட இந்தக் கிணறும் சுமார் ஏழு நூற்றாண்டுகள் பூமிக்கடியில் புதைந்து இருந்தது. அதை தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த பிறகு, இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி மையம் அதைப் பிரத்தியேகமாக காத்து வருகிறது.

மேலும், 2013 பிப்ரவரியில், இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி மையம் ராணி கி வாவ் படித்துறை கிணற்றை உலக பாரம்பரிய சின்ன பட்டியலில் சேர்க்கப் பரிந்துரை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க