• Download mobile app
12 Apr 2025, SaturdayEdition - 3349
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாஷ் சிஎஸ்ஆர் திட்டத்தின் கீழ் நேட்டிவ் மெடிக்கேர் அறக்கட்டளை மூலமாக மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் பயனாளர்களுக்கு ஒப்படைக்கப்பட்டன

April 9, 2025 தண்டோரா குழு

பாஷ் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு (CSR) திட்டத்தின் கீழ் 10 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு, அவை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.இந்த நிகழ்வு கோயம்புத்தூர்,அவினாசி சாலையில் உள்ள தி கிராண்ட் ரெஜென்ட் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த திட்டத்தின் மூலம் மருத்துவ மையங்களின் கட்டமைப்பு மற்றும் தேவையான மருத்துவ உபகரணங்கள் கொடுக்கப்பட்டன,இதன் மூலம் கிராமப்புறங்களில் மக்கள் தரமான சுகாதார சேவைகளை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் வால்பாறை, சோலையார் நகர்,பெரியபோது, மற்றும் டாப்ஸ்லிப், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட நெகமம், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆனைக்கட்டி, மற்றும் காரமடை ஒன்றியத்திற்குட்பட்ட காரமடை, சிறுமுகை, வெள்ளியங்காடு மற்றும் சீலியூர் ஆகிய சுகாதார நிலையங்கள் மேம்படுத்தப்பட்டன.

இந்த ஒப்படைப்பு விழாவில் பவன் குமார் ஜி கிரியப்பநவர் ஐ.ஏ.எஸ்.,மாவட்ட ஆட்சியர், டாக்டர் பி. பாலுசாமி மாவட்ட சுகாதார அதிகாரி,நவேத் நாராயண் தலைமை அதிகாரி,பாஷ் குளோபல் சாஃப்ட்வேர் டெக்னாலஜீஸ் – கோயம்புத்தூர், ஷில்பா சிஎஸ்ஆர் தலைவர், பாஷ் குளோபல் சாஃப்ட்வேர் டெக்னாலஜீஸ், மற்றும்ஏ.எஸ்.சங்கரநாராயணன் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர்,நேட்டிவ் மெடிக்கேர் அறக்கட்டளை ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும்,ஒன்றியம் மருத்துவ அதிகாரிகள், மருத்துவர்கள், முக்கிய பங்காளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தனர்.இந்த முயற்சி, பாஷ் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர் வையும், நேட்டிவ் மெடிக்கேர் அறக்கட்டளை யின் கிராம மேம்பாட்டு பணிகளையும் வெளிப்படுத்துவதோடு,மக்கள் மேம்பட்ட சுகாதார சேவைகளை பெற உதவுகிறது.

புதிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட கட்டமைப்புகளின் மூலம், இந்தியாவின் ஊரக பகுதிகளில் தரமான சுகாதார சேவைகள் பொது மக்களுக்கு சென்றடையும்.

மேலும் படிக்க