April 9, 2025
தண்டோரா குழு
பாஷ் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு (CSR) திட்டத்தின் கீழ் 10 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு, அவை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.இந்த நிகழ்வு கோயம்புத்தூர்,அவினாசி சாலையில் உள்ள தி கிராண்ட் ரெஜென்ட் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த திட்டத்தின் மூலம் மருத்துவ மையங்களின் கட்டமைப்பு மற்றும் தேவையான மருத்துவ உபகரணங்கள் கொடுக்கப்பட்டன,இதன் மூலம் கிராமப்புறங்களில் மக்கள் தரமான சுகாதார சேவைகளை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் வால்பாறை, சோலையார் நகர்,பெரியபோது, மற்றும் டாப்ஸ்லிப், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட நெகமம், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆனைக்கட்டி, மற்றும் காரமடை ஒன்றியத்திற்குட்பட்ட காரமடை, சிறுமுகை, வெள்ளியங்காடு மற்றும் சீலியூர் ஆகிய சுகாதார நிலையங்கள் மேம்படுத்தப்பட்டன.
இந்த ஒப்படைப்பு விழாவில் பவன் குமார் ஜி கிரியப்பநவர் ஐ.ஏ.எஸ்.,மாவட்ட ஆட்சியர், டாக்டர் பி. பாலுசாமி மாவட்ட சுகாதார அதிகாரி,நவேத் நாராயண் தலைமை அதிகாரி,பாஷ் குளோபல் சாஃப்ட்வேர் டெக்னாலஜீஸ் – கோயம்புத்தூர், ஷில்பா சிஎஸ்ஆர் தலைவர், பாஷ் குளோபல் சாஃப்ட்வேர் டெக்னாலஜீஸ், மற்றும்ஏ.எஸ்.சங்கரநாராயணன் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர்,நேட்டிவ் மெடிக்கேர் அறக்கட்டளை ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும்,ஒன்றியம் மருத்துவ அதிகாரிகள், மருத்துவர்கள், முக்கிய பங்காளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தனர்.இந்த முயற்சி, பாஷ் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர் வையும், நேட்டிவ் மெடிக்கேர் அறக்கட்டளை யின் கிராம மேம்பாட்டு பணிகளையும் வெளிப்படுத்துவதோடு,மக்கள் மேம்பட்ட சுகாதார சேவைகளை பெற உதவுகிறது.
புதிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட கட்டமைப்புகளின் மூலம், இந்தியாவின் ஊரக பகுதிகளில் தரமான சுகாதார சேவைகள் பொது மக்களுக்கு சென்றடையும்.