• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிரதமர் மோடியின் சாட்டையடி.

May 7, 2016 தண்டோரா குழு

ஆக்கப் பூர்வமான, திறமையான ஆட்சியை நடத்தி நாட்டை முன்னேற்றப் பாதையில் நடத்திச் செல்வதே அரசின் தாரக மந்திரம் என்று பிரதமந்திரி மோடி பதவியேற்றவுடன் பிரகடனம் செய்தார்.

ஆட்சியின் சிறப்பிற்கு அதிகாரிகளின் திறமையும், ஒழுக்க முறையுமே ஆணி வேர் என்பது அவரது அழுத்தமான கருத்து.

ஒழுங்கற்ற, அலட்சியப் போக்கான, நாணயமற்ற, திறமையற்ற, பொறுப்பற்ற, சோம்பித்திரியும், வேலையில் சுணக்கம் காட்டும், அலுவலர்களை அரசு எப்பொழுதுமே பொறுத்துக் கொள்ளாது என்றும் ஆணித்தரமாகக் கூறியுள்ளார்.

அந்த வழியின்படி தற்போது அரசு 33 மூத்த வருவாய்த் துறை அதிகாரிகளைக் கட்டாய பணி ஓய்வு எடுத்துக் கொள்ளும்படி ஆணையிட்டுள்ளது அரசு.

பதவிக்கு வந்த இந்த 2 ஆண்டுகளில் 72 அதிகாரிகளை ஒழுங்கு நடவடிக்கை காரணமாகப் பணி நீக்கம் செய்துள்ளது.

ஆனால் இது போன்று ஒட்டு மொத்தமாக 33 அதிகாரிகளை நீக்கியது இதுவே முதன் முறையாகும்.

இந்த 105 பேரும் கிளாஸ் 1 அதிகாரிகளாவர். அனைவரும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

திறமையற்ற ஆக்கப்பூர்வமற்ற, செயல் பாடுகள் தங்களது பதவியை எந்தவிதத்திலும் பாதிக்காது என்ற எண்ணம் கொண்ட மற்ற அலுவலர்களுக்கு அரசின் இந்த நடவடிக்கை ஒரு புரிந்துணர்தலாக இருக்கும் என்பது மூத்த அதிகாரிகளின் கருத்து.

அரசு அலுவலர்களின் அலட்சியப் போக்கைப் பற்றியும், பொது மக்களை அலைக்கழிக்கும் மனப்பான்மையைப் பற்றியும், பல துறைகளிலிருந்து, பிரதம மந்திரிக்கு அடிக்கடி புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

ஜனவரி மாதம் நடந்த கருத்துப் பரிமாற்றக் கூட்டத்தில், பிரதமர் மோடி அனைத்துத் துறை தலைமை அதிகாரிகளிடத்தும், ஆக்கப்பூர்வமற்ற திறமையற்ற அதிகாரிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ஆணையிட்டார்.
மேலும் அத்தகைய அதிகாரிகளின் பட்டியலை சமர்ப்பிக்குமாறும் அறிவுத்தியுள்ளார்.

அந்தப் பட்டியலில் 34 துறையைச் சேர்ந்த 122 துணைச் செயலர் பதவி வகிக்கும் அதிகாரிகள் இடம் பெற்றிருந்தனர்.

7 பேர் பாதுகாப்புத் துறையையும், 13 பேர் கல்வித் துறையையும், 7 பேர் சுகாதாரத் துறையையும், 6 பேர் தொழில் துறையையும், மற்றும் சிலர் உளவுத் துறையையும் மற்றவர்கள் மற்ற பல முக்கியத் துறைகளையும் சேர்ந்தவர்களாவார்கள்.

அந்தந்த துறைகளுக்கு இந்த அதிகாரிகளின் செயல் திறன் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

அதிகாரிகளின் துறைகளை அடிக்கடி மாற்றுவதன் மூலம் அவர்களது முழுத் திறமையையும் உபயோகித்துக் கொள்ள முடியுமா என்றும் அரசு முயற்சி செய்து வருகிறது.

மேலும் படிக்க