August 24, 2017
தண்டோரா குழு
அமெரிக்காவிலுள்ள பிரபல தனியார் பவுடரை பயன்படுத்திய பெண்ணுக்கு புற்றுநோய் ஏற்பட்டதால், அவருக்கு நஷ்ட ஈடாக 24௦௦ கோடி தரவேண்டும் என்று அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 63 வயது ஈவாஎச்சல்வேலியா என்பவர் வசித்து வருகிறார். அவர் பல ஆண்டுகளாக தனியார் நிறுவனம் தயாரித்து வரும் பவுடரை பயன்படுத்தி வந்தார். அதனால், தனக்கு கர்பப்பை புற்றுநோய் ஏற்பட்டது. அந்நிறுவனம் தனக்கு நஷ்டஈடு தரவேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நஷ்ட ஈடாக 417 மில்லியன் டாலர், இந்திய செலவானிபடி 24௦௦ கோடி தரவேண்டும் என்று உத்தரவிட்டார். அந்த உத்தரவை கேட்ட அந்த நிறுவனம் அதிர்ச்சி அடைந்தது. எனவே, அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.