• Download mobile app
23 Apr 2025, WednesdayEdition - 3360
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பில் பாக்கி விரைவாக வழங்க மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் வலியுறுத்தல்

December 23, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் சங்கத் தலைவர் உதயகுமார், செயலாளர் சந்திர பிரகாஷ், பொருளாளர் அம்மாசையப்பன், துணை செயலாளர் மைக்கேல் உட்பட கலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கோவை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு வரும் ஜனவரி முதல் ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் சார்பில் இலவசமாக கண் மற்றும் பல் மருத்துவ பரிசோதனை முகாம் நடத்துவது எனவும் கோவை நகரில் முக்கிய பகுதிகளில் ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பது எனவும் மாநகராட்சி எல்லையில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு இலவசமாக பாய், சாப்பாடு தட்டு, டம்ளர் போன்ற பொருட்களை வழங்குவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் கோவை மாநகராட்சி கமிஷனரை சந்தித்து நிலுவையில் உள்ள பில் தொகை மற்றும் பில்லில் பிடித்தம் செய்த 5 சதவீத தொகையை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டியல் தொகையுடன் வழங்கப்படும் ஜிஎஸ்டி தொகை 12 சதவீதத்தை 18 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது.

சங்க உறுப்பினர் நந்த கோபால் மறைவுக்கு இந்த கூட்டத்தில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. வரும் மார்ச் மாதம் சங்க உறுப்பினர்களுக்கு இன்சூரன்ஸ் புதுப்பித்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் சங்க உறுப்பினர்களின் பல்வேறு பிரச்னைகள் குறித்து விரிவாக பேசப்பட்டது. மாநகராட்சியில் நடக்கும் திட்டப் பணிகள், பில் பாக்கி இருப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும் படிக்க