• Download mobile app
21 Apr 2025, MondayEdition - 3358
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி பட்டமளிப்பு விழா

June 24, 2023 தண்டோரா குழு

பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் அறிவியல் துறைகளுக்கான பட்டமளிப்பு விழா இன்று மாலை கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

கல்லூரியின் அறிவியல் துறை ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுகலை மென்பொருள் அமைப்புகள்,கோட்பாட்டு கணினி அறிவியல்,தரவு அறிவியல்,இணைய பாதுகாப்பு,ஆடை வடிவமைப்பு மற்றும் வணிகம்,இரண்டு ஆண்டு முதுகலை பயன்பாட்டு கணிதம்,கணினி பயன்பாட்டுக்கான மேல் படிப்பு மற்றும் மூன்று ஆண்டு இளங்கலை கணினி அமைப்புகள் மற்றும் வடிவமைப்பு, பயன்பாட்டு அறிவியல் போன்ற பல்வேறு படிப்புகளை உள்ளடக்கியது. விழாவில் , பி.எஸ்.ஜி பயன்பாட்டு கணிதம் மற்றும் கணக்கீட்டு அறிவியல் நிறுவனத்தின் இயக்குனர் முனைவர் ர.நடராஜன் வரவேற்புரை வழங்கினார்.

தொடர்ந்து,பி.எஸ்.ஜி அறக்கட்டளையின் பொதுக்குழுத் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன் விருது வழங்கும் விழா அறிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக அமெரிக்கா சான்பிரான்சிஸ்கோ இன்ஃபோசிஸ்,ஈக்வினாக்ஸ்
தலைமை நிர்வாக அதிகாரி
அமித் கல்லே, சிறப்புரையாற்றி, ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மதிப்பெண் பெற்ற 8 பட்டதாரிகளை வாழ்த்திப் பாராட்டினார்.

மேலும், அவர் 220 முதுகலை பட்டதாரிகளுக்கும்,பல்வேறு துறைகளைச் சேர்ந்த 87 இளங்கலை பட்டதாரிகளுக்கும் பட்டச் சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து பி.எஸ்.ஜி அறக்கட்டளையின் பொதுக்குழுத் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் உறுதிமொழி வாசிக்கப்பட்டு பரிசளிப்பு விழா நிறைவடைந்தது.

மேலும் படிக்க