February 24, 2022
தண்டோரா குழு
கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி பார்மஸி கல்லூரியின் 15 வது பட்டமளிப்பு விழா பி.எஸ்.ஜி மருத்துவமனை கலையரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது.பி.எஸ்.ஜி பார்மஸி கல்லூரி முதல்வர் ராமநாதன் வரவேற்புரையாற்றினார்.
பி.எஸ்.ஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் தலைமை உரையாற்றினார்.பாரதியார் பல்கலைக் கழக துணைவேந்தர் பி.காளிராஜ் பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.பார்மஸி கல்லூரி மாணவர்கள் 260 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.23 மாணவர்களுக்கு பேருக்கு சிறப்பு பதக்கங்கள் வழங்கப்பட்டது.
மேலும்,சிறந்த மாணவர்களுக்கான பி.எஸ்.கோவிந்தசாமி நாயுடு விருதை மாணவிகள் பார்மஸி இளங்கலை மாணவி தர்ஷினி,பார்ம் டி மாணவி சுலேகா ஆகியோர் பெற்றனர்.விழாவில் பேராசிரியர் ப்ரூடன்ஸ் பேசினார்.விழா இறுதியில் துணை முதல்வர் சங்கர் நன்றி கூறினார்.