• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரி நிறுவன தின விழா

July 15, 2024 தண்டோரா குழு

கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரியில் நிறுவன தினம் 2024 கல்லூரி வளாகத்தில் இன்று காலை நடைபெற்றது.

பி.எஸ்.ஜி பாலிடெக்னிக் கல்லூரி சார்பில்
ஒவ்வொரு ஆண்டும் பி.எஸ்.ஜி பாலிடெக்னிக் கல்லூரியின் புகழ்பெற்ற முன்னாள் மாணவர்களை கவரவிக்கும் வகையில் நிறுவன தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.நிகழ்ச்சிக்கு பி.எஸ்.ஜி கல்வி குழுமங்களின் அறங்காவலர் எல்.L.கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
இதில் சுகுணா குழும நிறுவனங்களின் தலைவர் வி.லட்சுமிநாராயணசுவாமி தலைமை விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர் விருதுகளை கோயம்புத்தூர் லக்ஷ்மி மெஷின் ஒர்க்ஸ் நிறுவனத்தின்
உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு தலைவர் எஸ்.ராஜசேகரன், சென்னை
தெற்கு ரயில்வே துணை தலைமை மின்பொறியாளர்எஸ்.ஏ குமார்,புது தில்லி
இந்திய விமானப்படை அதிகாரி ஜிபி கேப்டன் ஜே.ஆனந்தகுமார்,கோவை
ஸ்ரீ பிரியா மெஷின் ஒர்க்ஸ் நிர்வாக இயக்குனர் ஸ்ரீமதி ஆகியோர் பெற்றனர்.

நிகழ்ச்சியில் பி.எஸ்.ஜி தலைவர் ஜி.ஆர். கார்த்திகேயன்,பி.எஸ்.ஜி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கிரிராஜ், பி.எஸ்.ஜி நிறுவனங்களின் முதல்வர்கள், அதிகாரிகள், முன்னாள் மாணவர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க