• Download mobile app
28 Apr 2025, MondayEdition - 3365
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பீர் உடலுக்கு நல்லது – ஆந்திர அமைச்சர்

July 4, 2017 தண்டோரா குழு

குறைந்த ஆல்கஹால் கொண்ட பீர் மற்ற மதுபானங்களை விட உடலுக்கு நல்லது என ஆந்திர மாநில அமைச்சர் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற அனைத்து மதுபானங்களை விட குறைந்த ஆல்கஹால் கொண்ட பீர் உடல் நலத்திற்கு நல்லது என்று ஆந்திர மாநில அமைச்சர் கொத்தபலி சாமுவேல் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

ஆந்திர மாநில அரசு பீர் விற்பனையை ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளது. குடிக்கும் மக்களின் பழக்கத்தை மாற்ற முடியாது. ஆனால், குறைந்த அளவு ஆல்கஹால் கொண்ட பானங்களை அறிமுகப்படுத்தலாம். ஏற்கனவே விற்பனையில் இருக்கும் பல பெரிய நிறுவனங்களின் பீர்களை விட குறைந்த ஆல்கஹால் இருக்கும் உள்ளுரில் உற்பத்தியாகும் பீர் மதுபானம் அறிமுகம் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க