• Download mobile app
23 Apr 2025, WednesdayEdition - 3360
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புழல் சிறையில் வேந்தர் மூவீஸ் மதனிடம் ரூ.15ஆயிரம் பறிமுதல்

March 13, 2017 தண்டோரா குழு

சென்னை புழல் சிறையில் உள்ள வேந்தர் மூவீஸ் எஸ்பி மதனிடமிருந்து 15,000 ரூபாயை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

எஸ்.ஆர்.எம். கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சீட் வாங்கி தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக வேந்தர் மூவிஸ் மதன் மீது புகார் எழுந்தது. அதையடுத்து, பல நாட்களாகத் தலைமறைவாக இருந்த மதனை காவல் துறையினர் கடந்த நவம்பர் மாதம் திருப்பூரில் கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைந்தனர்.

இந்நிலையில், புழல் சிறையில் உள்ள கைதிகளிடம் அதிக அளவு பணம் புழங்குவதாகச் சிறையின் ஊழல் கண்காணிப்பு அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. அதையடுத்து சிறையில் உள்ள அறைகளைக் காவலர்கள் சோதனை நடத்தினர்.

அப்போது மதன் அறையில் ரூ. 15 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க