• Download mobile app
26 Apr 2025, SaturdayEdition - 3363
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பொது வழி வண்டிப்பாதை ஆக்கிரமிப்பு – மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

June 28, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட ஒண்டிப்புதூர் பட்டணம் அருகே இட்டேரி சாலையில் தனியார் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்புக்கு செல்லும் 30 அடி அகலம் கொண்ட டிரைவ் வே எனப்படும் வண்டிப்பாதை பொது வழி ஆக்கிரமிக்கப்பட்டு கேட் வைத்து அடைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் தனி நபர் ஒருவர் கோவை மாநகராட்சியில் புகார் அளித்ததன் அடிப்படையில் கிழக்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் தலைமையில் அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பொதுப்பாதையை அடைத்து கேட் அமைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கோவை மாநகராட்சி செயற்பொறியாளர் (திட்டம்) சார்பில் தனியார் குடியிருப்பு உரிமையாளர் சங்க தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது.அத்துடன் அந்த நோட்டீஸ் நகல் பொதுப்பாதையை அடைத்து வைக்கப்பட்ட கேட்டிலும் ஒட்டப்பட்டது.

மாநகராட்சி சார்பில் ஒட்டப்பட்ட அந்த நோட்டீசில்,

‘‘சிங்காநல்லூர் கிராமம் 58-வது வார்டு தனியார் குடியிருப்புக்கு செல்லும் 30 அடி அகலமுள்ள டிரைவ் வே பகுதியில் கிரில் கேட் அமைத்து பொது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆக்கிரமித்துள்ளீர்கள். இந்த அறிவிப்பு கிடைத்த 7 நாட்களுக்குள் அந்த கேட்டை அப்புறப்படுத்த வேண்டும். தவறுமபட்சத்தில் மறு அறிவிப்பு இன்றி கோவை மாநகராட்சி சட்டப்பிரிவு 441-ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டு குற்றவியல் நடவடிக்கை தொடரப்படும்.

மேலும் மாநகராட்சியால் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு அதற்கான செலவு தொகையை தங்களிடம் வசூலிக்கப்படும்’’ என்று கூறப்பட்டிருந்தது. இதனிடையே தற்போது வரை கேட் அகற்றப்படவில்லை. மாநகராட்சி அதிகாரிகள் கேட்டை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்க