• Download mobile app
26 Apr 2025, SaturdayEdition - 3363
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பொள்ளாச்சியில் உரிய ஆவணம் இல்லாதால் அனுஷ்கா கேரவன் பறிமுதல்

May 31, 2017 தண்டோரா குழு

பொள்ளாச்சியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் நடிகை அனுஷ்கா பயன்படுத்தி வந்த கேரவனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற பல மொழிகளில் படப்பிடிப்புகள் அவ்வப்போது நடைபெற்று வருவது வழக்கம். இங்கு பல முன்னணி நடிகர், நடிகைகளும் வந்து செல்வர்.

இந்நிலையில், நடிகை அனுஷ்கா பங்குபெறும் தெலுங்கு படத்தின் பாடல் காட்சி படப்பிடிப்பு பொள்ளாச்சி அருகே உள்ள காளியாபுரத்தில் நடைபெற்றது. அனுஷ்கா பயன்படுத்தி வந்த கேரவன் படப்பிடிப்பு முடிந்து பொள்ளாச்சி நோக்கி வந்தது. அப்போது அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்ட பொள்ளாச்சி போக்குவரத்து அலுவலர்கள் கேரவன் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து அனுஷ்கா பயன்படுத்தி வந்த கேரவனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அந்த கேரவனின் உரிமையாளர் இளங்கோவனிடம் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.கேரவன் பறிமுதல் செய்யப்பட்டபோது கேரவனில் அனுஷ்கா இல்லை என்பது குறிபிடத்தக்கது.

மேலும் படிக்க