November 13, 2024
தண்டோரா குழு
பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் சிறு நிதி நிறுவனத்தின் மேலாளராக பணிபுரியும் ஜெபசீலன் சாம்ராஜ் (37) என்பவர் கொடுத்த புகாரில் கடந்த ஆண்டு கிளை மேலாளர் ரஷ்யா பேகம்,நகை மதிப்பீட்டாளர் நிசாந்தினி மற்றும் பிரதிநிதி ராஜலட்சுமி ஆகியோர்களுடன் சேர்ந்து குமரேசன், நாகதர்ஷினி,சரவணன் என்பவர்கள் சிறு நிதி நிறுவனத்தில் 505.95 கிராம் தங்க நகைகளை ரூபாய் 21,90,047 /- அடகு வைத்துள்ளனர்.
அந்த நிறுவனத்தின் தணிக்கையின் போது அவர்கள் வைத்த 505.95 கிராம் நகையில் 205.93 கிராம் நகை போலி நகை என்பது தெரியவந்ததின் பேரில்.இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார். இப் புகாரின் மீது நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K. கார்த்திகேயன்,உத்தரவின் பேரில் *மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் புலன் விசாரணை செய்து நிதி நிறுவனத்தில் ஏமாற்றிய குமரேசன், நாகதர்ஷினி ஆகியோர்களை இன்று (12.11.2024) கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
மேலும் இது போன்று மோசடி குற்றங்களில் ஈடுபடுபவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.