• Download mobile app
30 Apr 2025, WednesdayEdition - 3367
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

போலீஸ்காரரை கிரிக்கெட் மட்டையால் தாக்கிய காவலர் இருவர் மீது வழக்குப்பதிவு

January 29, 2022 தண்டோரா குழு

கோவையில் மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்த போலீஸ்காரரை கிரிக்கெட் மட்டையால் தாக்கிய காவலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.

கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (37). இவர் கோவைப்புதூர் 4வது பட்டாலியனில் போலீஸ்காரராக உள்ளார். இவருக்கு திருமணமாகி கவுசல்யா (34) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் கோவைப்புதூர் போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கியுள்ளனர். அப்போது, எதிர்வீட்டில் வசிக்கும் போலீஸ்காரர் ராமச்சந்திரன் (32) மனைவியுடன், கவுசல்யா நட்பாக பழகி வந்துள்ளார். அப்போது ராமச்சந்திரனுக்கும், கவுசல்யாவுக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையறிந்த முருகானந்தம், ராமச்சந்திரனை கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவர்களுக்கிடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று மீண்டும் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த முருகானந்தம், கிரிக்கெட் பேட்டால் ராமச்சந்திரனை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில், அவருக்கு உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் காயமடைந்த ராமச்சந்திரனை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து ராமச்சந்திரன் குனியமுத்தூர் போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் முருகானந்தம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதேபோல், முருகானந்தம் மனைவி கவுசல்யா குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், எதிர்வீட்டில் வசிக்கும் ராமச்சந்திரன் மனைவி திவ்யாவும், நானும் தோழிகளாக பழகி வந்தோம். இதற்கிடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திவ்யா 2வது பிரசவத்திற்காக அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அப்போது எனது வீட்டுக்கு வந்த ராமச்சந்திரன் என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார்.

அதன்பின்னரும் மிரட்டி டார்ச்சர் செய்து வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்திருந்தார். அந்த புகாரின் பேரில், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் ராமச்சந்திரன் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க