• Download mobile app
25 Apr 2025, FridayEdition - 3362
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ப.சிதம்பரம் வீட்டில் சோதனை : சிபிஐ விளக்கம்

May 16, 2017 தண்டோரா குழு

சட்ட ரீதியிலான முறையிலேயே ப.சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரம் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடந்ததாக சிபிஐ இணை இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார்.

ப.சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரம் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இன்று காலை சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில், சோதனை நடத்தியது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரி வினீத் விநாயக் செய்தியாளர்களுக்கு சந்தித்து பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

ஐ.என்.எக்ஸ். நிறுவனம் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.ஐ.என்.எக்ஸ்.நிறுவனத்தின் பங்குதாரர் கார்த்தி. இவர் அந்நிறுவனத்திற்கு சலுகை காட்டியுள்ளார்.ஐ.என்.எக்ஸ்.நிறுவனத்தின் உரிமையை வேறு நிறுவனத்திற்கு மாற்றம் செய்துள்ளனர்.மொரீஷியஸ் நாட்டைச் சேர்ந்த 3 நிறுவனங்கள் ஐ.என்.எக்ஸ்.நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளன. சி.பி.ஐ. சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது.

சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் வீடு,அலுவலகங்களில் சட்டரீதியான வழிகளிலேயே சோதனை நடக்கிறது.சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.சோதனையில் அரசியல் குறுக்கீடு எதுவும் இல்லை.

இவ்வாறு வினீத் விநாயக்கூறியுள்ளார்.

மேலும் படிக்க