• Download mobile app
29 Apr 2025, TuesdayEdition - 3366
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மகளிர் மேம்பாட்டிற்காக இலவச தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி.! – துணை மேயர் பங்கேற்பு

March 17, 2022 தண்டோரா குழு

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை கிளை சார்பில் ஆதரவற்ற, ஏழைப் பெண்களுக்கு ‘இலவச தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி’ இன்று (வியாழன்) மாலை 5 மணிக்கு கரும்புக்கடை ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

ஜமாஅத்தின் கோவை மாவட்டத் தலைவர். P.S. உமர் ஃபாரூக் துவக்கவுரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகராட்சியின் துணை மேயர் வெற்றிச் செல்வன் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கியதுடன் பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களையும் வழங்கினார்.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மாநிலத் தலைவர் மௌலவி முஹம்மது ஹனீஃபா மற்றும் ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியின் தாளாளர் மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மாநிலப் பொதுச்செயலாளர் K. ஜலாலுதீன், மக்கள் சேவைத்துறை செயலாளர் I. ஜலாலுதீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மகளிர் மேம்பாடு மற்றும் சுயமுன்னேற்றத்திற்கான இதுபோன்ற மக்கள் சேவைப் பணிகளை அனைத்து தரப்பினருடனும் இணைந்து சிறப்பான தாக்கம் ஏற்படுத்திடும் வகையில் பணியாற்ற ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும் என இந்நிகழ்வு வலியுறுத்தியது.

மேலும் படிக்க