• Download mobile app
10 Apr 2025, ThursdayEdition - 3347
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மதுரையில் கோலாகலமாக நடைபெற்ற மண்டல அளவிலான ஈஷா கிராமோத்சவ விளையாட்டுப் போட்டிகள்!

December 9, 2024 தண்டோரா குழு

ஈஷா சார்பில் நடைபெறும் பாரதத்தின் மாபெரும் கிராமப்புற விளையாட்டுத் திருவிழாவான 16-வது ஈஷா கிராமோத்சவத்தை முன்னிட்டு மண்டல அளவிலான போட்டிகள் மதுரையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்.ஸ்டேடியத்தில் நேற்று ( 08/12/2024 ) நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தல்லாகுளம் காவல் ஆய்வாளர் ஜான் பிரிட்டோ வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.ஈஷா சார்பில் கிராமங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன.அந்த வகையில் இந்தாண்டிற்கான முதற்கட்ட கிளஸ்டர் அளவிலான போட்டிகள் கடந்த நவம்பர் மாத வார இறுதி நாட்களில் நடைபெற்றது.

இதில் ஆண்களுக்கான வாலிபால் போட்டிகளும்,பெண்களுக்கான த்ரோபால் போட்டிகளும் நடத்தப்பட்டன.இந்த விளையாட்டுப் போட்டிகள் 5 தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு,ஆந்திரா, தெலுங்கானா,கர்நாடகா, கேரளா மற்றும் யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரியில் நடைபெற்றது.

மொத்தம் 162 இடங்களில் நடைபெற்ற முதற்கட்ட கிளஸ்டர் போட்டிகளில் 5,000 அணிகளில் 43,000 வீரர் வீராங்கணைகள் பங்கேற்றனர்.இதில் 10,311 பேர் கிராமங்களில் வசிக்கும் குடும்ப பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.கிளஸ்டர் அளவில் தேர்வான அணிகளுக்கு இரண்டாம் கட்டமாக மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் நேற்று தமிழ்நாடு முழுவதும் 6 இடங்களில் நடைபெற்றது.

கோவை,சேலம் திருச்சி திருநெல்வேலி மதுரை,வேலூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற போட்டிகளில் மொத்தம் 136 அணிகளும்,ஆயிரக்கணக்கான வீரர் , வீராங்கணைகளும் கலந்து கொண்டனர் . மதுரை மண்டலத்தில் சிவகங்கை , தேனி , ராமநாதபுரம்,திண்டுக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான கிராமங்களில் இருந்து 150 அணிகள் முதற்கட்ட கிளஸ்டர் அளவிலானப் போட்டிகளில் பங்கேற்றனர் . இதில் இருந்து 18 அணிகள் இரண்டாம் கட்டமாக மதுரை டாக்டர் எம்.ஜி.ஆர்.ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற மண்டல அளவிலானப் போட்டிகளில் பங்கேற்றன.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டிகளின் இறுதியில் முதல் பரிசை தேனி B.K.A. வாலிபால் கிளப் அணியினரும்,இரண்டாம் பரிசை மதுரை கட்டளை SSPM அணியினரும் பெற்றனர் . வெற்றி பெற்ற அணிகளுக்கு தல்லாகுளம் காவல் ஆய்வாளர் ஜான் பிரிட்டோ மற்றும் உதவி காவல் ஆய்வாளர் வினோத் குமார் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

இந்த விளையாட்டுப் போட்டிகளுடன் பாரம்பரிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சியான பறையாட்டம் நடைபெற்றது.மேலும் பார்வையாளர்களுக்கான கேளிக்கை விளையாட்டுகளும்,அனைவருக்கும் இலவச யோக வகுப்புகளும் நடைபெற்றன.இதில் ஏராளமானபொது மக்கள் தங்கள் குடும்பத்துடன் திரளாக கலந்து கொண்டு விழா நிகழ்ச்சிகளை வெகுவாக கண்டு ரசித்தனர்.மேலும் மண்டல அளவிலான போட்டிகளில் தேர்வான அணிகள் கோவையில் ஆதியோகி முன்பு டிசம்பர் 28 – ம் தேதி மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ள தென்னிந்திய அளவிலான இறுதிப் போட்டிகளில் பங்கேற்க உள்ளன.

கிராம மக்களின் வாழ்வியலில் விளையாட்டு போட்டிகள் மூலம் புத்துணர்வு மற்றும் ஆரோக்கியத்தை கொண்டு வரவும், விளையாட்டை கிராம மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாற்றவும் கிராமோத்சவ திருவிழாவை ஈஷா ஆண்டுதோறும் நடத்துகிறது.விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதால் கிராமப்புற இளைஞர்கள் போதை பழக்கங்களுக்கு அடிமையாவதில் இருந்து விடுபடுகின்றனர்.மேலும் கிராமங்களில் சாதி வேறுபாடுகளை தாண்டி மக்கள் ஒன்றிணையும் வாய்ப்பு மேம்படுகிறது. குறிப்பாக கிராமப்புற பெண்கள் குறிப்பிட்ட வயதிற்கு பிறகு விளையாடுவது இல்லை , இந்த நிலையை மாற்றி அவர்களும் விளையாடுவதற்கான களத்தை கிராமோத்சவ விழா அமைத்து தருகிறது.

மேலும் படிக்க