• Download mobile app
28 Apr 2025, MondayEdition - 3365
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

‘மத்திய அரசிடம் தமிழகம் பிச்சை எடுக்க முடியாது’ – தம்பி துரை

July 15, 2017 தண்டோரா குழு

மாநில அரசின் உரிமைகள் மத்திய அரசால் பறிக்கப்படுகின்றன, மத்திய அரசிடம் தமிழகம் பிச்சை எடுக்க முடியாது என அ.தி.மு.க., நாடாளுமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான
தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது லஞ்ச புகார்கள் தொடர்பான கேள்விக்கு, எதிர்கட்சிகள் லஞ்சப்புகார்கள் தெரிவித்து அரசியல் செய்கின்றன, இதை அரசியல் ரீதியாக அ.தி.மு.க., எதிர்கொள்ளும் என தெரிவித்தார்.

“தமிழகத்தில் நீட் பிரச்சினைக்கு காரணம் தி.மு.க.வும்,காங்கிரஸ் கட்சியுமே காரணம். தற்போது அந்த இரு கட்சிகளும் நீலிக்கண்ணீர் வடிப்பதை ஏற்க முடியாது.

தமிழகத்திற்கு தேவையான பொறியியல், மருத்துவ மாணவர்களை தமிழக அரசுதான் முடிவு செய்ய வேண்டும் ஆனால் மத்திய அரசு அனைத்து அதிகாரத்தையும் எடுத்து செல்ல முயல்கிறது.” என குற்றம்சாட்டினார்.

மேலும் இது கூட்டாச்சி தத்துவத்திற்கு எதிரானது என கருத்து தெரிவித்த தம்பிதுரை தமிழகம் முனிசிபாலிட்டியாக மாறாக கூடாது என்றார். மாநில அரசின் உரிமைகள் மத்திய அரசால் பறிக்கப்படுகின்றன மத்திய அரசிடம் தமிழகம் பிச்சை எடுக்க முடியாது எனக் கூறினார்.

நீட் விவகாரம் கோர்ட்டிற்கு சென்று விட்டதால் மத்திய அரசை அ.தி.மு.க.,வால் வலியுறுத்த முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாகவும், இருந்தாலும் நாடாளுமன்றத்தில் நீட் விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க., சார்பில் குரல் எழுப்பபடும் எனவும் தமிழக மாணவர்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்க அனைத்து முயற்சிகளும் அ.தி.மு.க., மேற்கொள்ளும் என தெரிவித்தார்.

அதிமுக அணிகள் தொடர்பான கேள்விக்கு பதலளித்த அவர் “அதிமுகவில் ஓரே அணிதான் இருக்கிறது. பல அணிகள் இருப்பதாக ஊடகங்கள்தான் பெரிதுபடுத்துகின்றன அனைத்து நிர்வாகிகளும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் செயல்பட்டு வருகின்றனர்.” என்றார்

நடிகர் கமல் அரசியலுக்கு வந்து கருத்துக்களை தெரிவிக்க வேண்டும், ஆட்சியில் தவறுகள் இருந்தால் நீதிமன்றத்திற்கு செல்லவேண்டும். அதிமுக மக்களுக்கு மட்டுமே பயப்படுகிறது மற்ற கட்சிகளுக்கு பயப்படாது என தம்பிதுரை கூறினார்.

மேலும் படிக்க