• Download mobile app
24 Apr 2025, ThursdayEdition - 3361
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மம்தா தலைக்கு ரூ.11 லட்சம் – பா.ஜ.க. இளைஞர் அணி தலைவர்

April 12, 2017 தண்டோரா குழு

மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் தலையை வெட்டி கொண்டு வருபவர்களுக்கு ரூ.11 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று பா.ஜ.க. இளைஞர் அணி தலைவர் யுவ மோட்சா தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தின் பிர்பம் மாவட்டம் சூரி பகுதியில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஊர்வலம் நடத்த காவல்துறையினர் அனுமதி அளிக்கவில்லை. இதனை அடுத்து தடையை மீறி அங்கு ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இதில் பலர் காயமடைந்தனர்.

இந்த தடியடி தாக்குதலுக்கு பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் யோகேஷ் வர்ஷினே கடும் கண்டனம் தெரிவித்து கூறுகையில், “ ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர்கள். அவர்கள் பக்தர்கள் மட்டுமே. அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. மம்தா அரசு முஸ்லீம்களை திருப்திப்படுத்துவதற்காக இந்துக்களை குறிவைத்து அடக்கு முறையில் ஈடுபட்டு வருகிறது. மம்தாவின் தலையை கொண்டு வெட்டி வருபவர்களுக்கு ரூ.11 லட்சம் பரிசு வழங்கப்படும்.” என்றார் அவர்.

இந்த அறிவிப்பால் மேற்குவங்கத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க