April 12, 2017
தண்டோரா குழு
மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் தலையை வெட்டி கொண்டு வருபவர்களுக்கு ரூ.11 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று பா.ஜ.க. இளைஞர் அணி தலைவர் யுவ மோட்சா தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலத்தின் பிர்பம் மாவட்டம் சூரி பகுதியில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஊர்வலம் நடத்த காவல்துறையினர் அனுமதி அளிக்கவில்லை. இதனை அடுத்து தடையை மீறி அங்கு ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இதில் பலர் காயமடைந்தனர்.
இந்த தடியடி தாக்குதலுக்கு பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் யோகேஷ் வர்ஷினே கடும் கண்டனம் தெரிவித்து கூறுகையில், “ ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர்கள். அவர்கள் பக்தர்கள் மட்டுமே. அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. மம்தா அரசு முஸ்லீம்களை திருப்திப்படுத்துவதற்காக இந்துக்களை குறிவைத்து அடக்கு முறையில் ஈடுபட்டு வருகிறது. மம்தாவின் தலையை கொண்டு வெட்டி வருபவர்களுக்கு ரூ.11 லட்சம் பரிசு வழங்கப்படும்.” என்றார் அவர்.
இந்த அறிவிப்பால் மேற்குவங்கத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.