• Download mobile app
27 Apr 2025, SundayEdition - 3364
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மரம் விழுந்து ஒருவரின் கால் துண்டிப்பு..! பத்திரப்பதிவு அலுவலகத்தில் பரபரப்பு….!

May 11, 2022 தண்டோரா குழு

கோவையில் பத்திரப்பதிவு அலுவலகத்த்திற்க்கு வந்த நபர்கள் மீது மரம் விழுந்ததால் ஒருவரின் கால் துண்டான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் கடந்த இரண்டு நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது.இதனால் பல்வேறு பகுதியில் மழையின் காரணமாக மரங்கள் சாய்ந்து வருகிறது. இந்நிலையில் கோவை போத்தனூர் ஐ சேர்ந்த பரூக் என்பவர் கிணத்துக்கடவு பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு தன்னுடைய வேலை சம்மந்தமாக வந்துள்ளார்.

அப்போது அங்கிருந்த மரம் ஒன்று முறிந்து அவர் மீது விழுந்துள்ளது.மரம் விழுந்ததில் அவருடைய கால் இரண்டு துண்டாகியுள்ளது. அதேபோல் அருகில் இருந்த பெண் ஒருவர் மீது மரம் விழுந்ததில் அவர் படுகாயம் அடைந்தார்.அங்கிருந்த நபர்கள் இருவரையும் மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பத்திர பதிவிற்கு வந்த நபர் மீது மரம் விழுந்து கால் துண்டான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க