• Download mobile app
29 Apr 2025, TuesdayEdition - 3366
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மருத்துவர்கள் மருந்து சீட்டில் பெரிய எழுத்துகளில் எழுத வேண்டும் பாட்னா எய்ம்ஸ் நிர்வாகம் அறிவிப்பு

August 10, 2017 தண்டோரா குழு

மருத்துவர்கள் மருந்து சீட்டில் பெரிய எழுத்துகளில் எழுத வேண்டும் என்று பாட்னாவைச் சேர்ந்த எய்ம்ஸ் மருத்துவ நிர்வாகம் அறிவித்துள்ளது.

பீகார் மாநிலத்தை சேர்ந்த ஜுஹி என்ற மாணவி, சுமார் ஒரு மாதத்திற்கு முன் உடல் நலக்குறைவால், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு மலேரியா அறிகுறி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.காய்ச்சல் குறைய Lumerax 80 என்னும் மருந்துதை மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

அவர் மருந்து சீட்டை மருந்து கடையில் காட்டியபோது, அவருக்கு Lumarax 80 என்னும் மருந்து தரப்பட்டது. அந்த மருந்தை உட்கொண்ட பிறகு, ஜுஹிக்கு பக்கவாதம் ஏற்படுள்ளது. இந்நிலையில்த மீண்டும் மருத்துவமனைக்கு சென்ற போது, அவருடைய நிலையைக் கண்ட மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அது குறித்து விசாரித்தபோது, மனநிலை பிரச்சனைக்கு தரப்படும் Lumarax 80 மருந்து அவருக்கு தரப்பட்டது தெரிய வந்துள்ளது. அந்த மருந்துக்கடை ஊழியர், மருந்து சீட்டில் எழுதப்பட்டிருந்த மருந்த தெளிவாக இல்லாததால், மருந்தை மாற்றி தந்ததும் தெரிய வந்ததது.

இதனையடுத்து, மருத்துவர்கள் மருந்து சீட்டில் தெளிவாகவும், பெரிய எழுத்துக்களில் எழுத வேண்டும் என்று பாட்னா எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மருத்துவமனையிலிருக்கும் அனைத்து துறைகளும் அந்த உத்தரவை பின்பற்ற வேண்டியது அவசியம் என்று பாட்னா எய்ம்ஸ் நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க