• Download mobile app
27 Apr 2025, SundayEdition - 3364
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாட்டிறைச்சி இல்லாததால் திருமணத்தை நிறுத்திய மணமகன்!

June 19, 2017 தண்டோரா குழு

உத்தரபிரதேஷ் மாநிலத்தில் திருமண விருந்தில் மாட்டிறைச்சி இல்லை என்ற காரணத்தால் திருமணம் நின்றுப்போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேஷ் மாநிலத்தில் போட் காவல்துறை வரம்பிலுள்ள தரியா கார் கிராமத்தில் நடக்கவிருந்த திருமணத்தில் மாட்டிறைச்சி இருக்க வேண்டும் அல்லது திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று மணமகனின் குடும்பத்தினர் பெண் வீட்டாரிடம் நிபந்தனை விதித்தத்தோடு, வரதட்சணையாக கார் ஒன்றையும் கேட்டுள்ளனர். இந்த நிபந்தனையை ஏற்க மறுத்தால் திருமணம் நின்றுவிட்டது.

இதுகுறித்து மணப்பெண்ணின் தாயார் கூறுகையில்,

“திருமண விருந்தின்போது மாட்டிறைச்சி பரிமாற வேண்டும் என்றும், வரதட்சிணையாக கார் ஒன்று வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர். அவர்களுடைய நிபந்தனையை மறுத்தால், திருமணத்தை நிறுத்திவிட்டனர். மாநில அரசு மாட்டிறைச்சிக்கு தடைவித்துள்ளது. நாங்கள் அதை எப்படி வாங்கி விருந்தில் பரிமாறுவது? என்று கூறினார்.

உத்தர பிரதேஷ் மாநில அரசு மாட்டிறைச்சிக்கு தடை கொண்டு வந்தது. அதன் முதல், திருமண விருந்தில் மாட்டிறைச்சி பரிமாறவில்லை என்ற காரணத்தால், பல திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. பலருடைய வாழ்கையும் கேள்வி குறியாகிவிட்டது.

இதே போல், கடந்த ஏப்ரல் மாதத்தில் நடக்க விருந்த திருமணமும் மாட்டிறைச்சி பரிமாற வில்லை என்பதால் மற்றொரு மணமகன் திருமணத்தை நிறுத்திவிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க