• Download mobile app
30 Apr 2025, WednesdayEdition - 3367
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாநகராட்சி சார்பாக பூத் சிலிப் வழங்கும் பணி தீவிரம்

February 17, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் மொத்தமாக 16 லட்சத்து 7,672 வாக்காளர்கள் உள்ளனர். வரும் 19-ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப் ஏற்கனவே அச்சடிக்கப்பட்டு மாநகராட்சியால் தயாராக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பூத் சிலிப்களை அரசியல் கட்சியினர் கையில் கொடுக்காமல், மாநகராட்சி அலுவலர்கள் வாக்காளர்கள் கையில் கொடுக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து பூத் சிலிப்களை வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைளில் கோவை மாநகராட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,

‘‘ஒவ்வொரு வார்டாக வீடு, வீடாக சென்று வாக்காளர்களிடம் பூத் சிலிப் வழங்கப்பட்டு வருகிறது. அப்போது சிலிப் பெற்று கொண்டதற்காக வாக்காளர்களிடம் கையெழுத்தும் வாங்கப்படுகிறது. இந்த பணியில் அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்டோர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.மாநகராட்சி 5 மண்டல அலுவலகங்களிலும் பூத் சிலிப் விநியோகம் குறித்து அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.’’ என்றார்.

மேலும் படிக்க