• Download mobile app
13 Oct 2024, SundayEdition - 3168
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாநில பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டி வெற்றி பெற்ற வீரர்களுக்கு இன்ஜினியர் சந்திரசேகர் பரிசு வழங்கினார்

October 9, 2024 தண்டோரா குழு

தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கம் மற்றும் அமிர்த வித்ய விஷ்வ பீடம் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தியது.இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து
100 மேற்பட்ட பாரா நீச்சல் வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்.

கை கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள்,பார்வையற்றோர், உயரம் குறைந்தவர்கள்,அறிவுசார் குறைபாடு உடையோர் போன்ற பிரிவுகளுடைய மாற்றுத்திறனாளிகள் பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 50 மீட்டர் 100 மீட்டர் ப்ரீ ஸ்டைல்
பேக் ஸ்டிரோக், பட்டர்பிளை ஸ்டிரோக்
ப்ரஸ்ட் ஸ்டிரோக் 150 மீட்டர் பிரீ ஸ்டைல்
மற்றும் 200 மீட்டர் தனிநபர் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது.

போட்டிகளின் முடிவில் 317 புள்ளியுடன் சென்னை அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை பெற்றது. 118 புள்ளிகளுடன் சேலம் அணி இரண்டாம் இடத்தை பிடித்தது.இப்போட்டியில் தகுதி பெற்ற பாரா நீச்சல் வீராங்கனைகள் கோவாவில் நடைபெறும் தேசிய பாரா நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.மாற்றுத்திறனாளி நீச்சல் வீரர் வீராங்கனைகளுக்கு டி ஷர்ட், தங்கு வசதி, உணவு,உள்ளூர் போக்குவரத்து போன்ற அனைத்து வசதிகளும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

வீரர் வீராங்கனைகளுக்கு பாரா ஒலிம்பிக் சங்கத்தின் தேசிய துணை தலைவர் இன்ஜினியர் சந்திரசேகர் பதக்கம் அணிவித்து கோப்பை வழங்கி சிறப்பித்தார்.
பொதுச் செயலாளர் கிருபாகராஜா, கோவை மாவட்ட பாரா விளையாட்டு சங்கத்தின் தலைவர் ஷர்மிளா ராம் ஆனந்த் உள்ளிட்டவர் கலந்து கொண்டனர்.
போட்டியை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

மேலும் படிக்க