• Download mobile app
21 Apr 2025, MondayEdition - 3358
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கத்தியுடன் வந்தவரால் பரபரப்பு

July 17, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த ஒருவர் காய்கறி வெட்டும் கத்தியை புதிதாக வாங்கி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள், அரசியல் அமைப்பினர், விவசாயிகள் உள்ளிட்ட பலர் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.

ஆட்சியர் அலுவலகம் வருவோர் போலீசார் சோதனைக்கு பின்பே அனுப்பப்பட்டனர். அப்படி சோதனை செய்யும் போது ஒருவர் காய்கறி வெட்டும் கத்தியை புதிதாக வாங்கி தனது பையில் வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் அவரிடம் விசாரிக்கையில் டவுன்ஹால் பகுதியில் வீட்டு தேவைக்காக புதிதாக காய்கறி வெட்டும் கத்தியை வாங்கியுள்ளதாகவும், மனு அளித்துவிட்டு வீட்டிற்கு செல்ல உள்ளதாகவும் கூறினார்.

போலீசார் அவரிடம் இருந்த கத்தியை பெற்றுக்கொண்டு பின்னர் மனு அளிக்க அனுமதி அளித்தனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க