• Download mobile app
24 Apr 2025, ThursdayEdition - 3361
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மின்னணு உயிர் வாழ் சான்றிதழை செயலி மூலம் சம்ர்ப்பிக்கலாம் – வருங்கால வைப்பு நிதி உதவி கமிஷனர்

November 22, 2022 தண்டோரா குழு

வருங்கால வைப்பு நிதி உதவி
கமிஷனர் (பென்ஷன்) ஆல்பர்ட் ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஓய்வூதியதாரர்கள் தங்களது கைரேகை அல்லது கருவிழி அடிப்படையில் மின்னணு உயிர் வாழ் சான்றிதழை சமர்ப்பித்து வந்தனர். ஆனால் சிலருக்கு கைரேகை அல்லது கருவிழி அடிப்படையில் உயிர் வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடிவது இல்லை.

இதனை அடுத்து ஓய்வூதியதாரர்கள் தங்களது மின்னணு உயிர் வாழ் சான்றிதழை சமர்ப்பிப்பதற்காக மற்றொரு வழிமுறையை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒன்றிய அரசு பென்ஷன் மற்றும் பென்ஷனர் நல்வாழ்வு துறை சார்பாக AadhaarFaceRd APP என்கிற செயலியை உருவாக்கி உள்ளது. ஓய்வூதியதாரர்கள் இச்செயலியை தங்களது ஆண்ட்ராய்டு போன் மூலமாக பதிவிறக்கம் செய்து அதன்பின் Jeevan pramaan Face Application என்ற மென்பொருளையும் பதிவிறக்கம் செய்து உரிய காலத்தில் உயிர் வாழ் சான்றிதழை புதுப்பிக்கலாம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க