• Download mobile app
23 Apr 2025, WednesdayEdition - 3360
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மீனவர்களுக்கு 5000 புதிய வீடுகள் – நிதியமைச்சர் தகவல்

March 16, 2017 தண்டோரா குழு

மீனவர்களுக்கு ரூ.85 கோடி செலவில் 5000 புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என்று நிதியமைச்சர் டி ஜெயகுமார் நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப் பேரவையில் வியாழனன்று தாக்கலான நிதிநிலை அறிக்கையில்,

“நாட்டுப்படகு மீனவர்களுக்கு மானிய விலையில் ஆண்டுக்கு 3000 லிட்டரிலிருந்து 3400 லிட்டராக டீசல் வழங்கப்படும். எண்ணூர், காசிமேடு உட்பட 7 மீன்பிடி துறைமுகங்கள் ரூ.1105 கோடி செலவில் மேம்படுத்தப்படும். இயந்திர மீன்பிடி படகுகளுக்கான டீசல் 15,000 லிருந்து 18,000 லிட்டராக உயர்த்தப்படும்.

ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூரில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும். மீனவர்களுக்கான நிவாரண உதவித்தொகை ரூபாய் 4,500 ஆக உயர்த்தப்படும். மீனவர்களுக்கு ரூ.85 கோடி செலவில் 5000 வீடுகள் கட்டித்தரப்படும்”

இவ்வாறு நிதியமைச்சர் டி ஜெயகுமார் நிதிநிலை அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும் படிக்க