• Download mobile app
26 Apr 2025, SaturdayEdition - 3363
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் பேரூர் நடராஜன் காலமானார்

June 13, 2017 தண்டோரா குழு

திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பேரூர் நடராஜன் உடல்நலகுறைவால் இன்று காலமானார்.

தி.மு.க. தொழிற்சங்கமான தொ.மு.ச.வின் பேரவை தலைவராக கோவை மாவட்டத்தை சேர்ந்த பேரூர் நடராஜன் இருந்து வந்தார். அவருக்கு வயது 78.

இவர் இளமை காலம் முதலே தொழிற்சங்க உறுப்பினராக தீவிரமாக செயல்பட்டு வந்தார். பின்னர் தொழிற்சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்த இவர் 1977 சட்டமன்ற உறுப்பினரானார். அதன் பின்னர் 1984, 1989, 1996 என 4 முறை பேரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறு காரணமாக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1 மணி அளவில் மரணமடைந்தார். இவரது மறைவிற்கு திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தற்போது, இவரது உடல் மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு தி.மு.க. தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மொத்தம் 6 முறை தேர்தலில் போட்டியிட்ட இவர் 4 முறை வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க