• Download mobile app
21 Apr 2025, MondayEdition - 3358
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மெரீனா கடற்கரையில் போராட்டகாரர்கள் வெளியேற்றம்

January 23, 2017 தண்டோரா குழு

சென்னை மெரீனா கடற்கரையில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த நிரந்தர சட்டம் கொண்டு வரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை, மக்களைக் காவல் துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகின்றனர்.

தமிழகத்தில் இனிவரும் காலங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த நிரந்தர சட்டம் கொண்டு வரவேண்டும். பீட்டா அமைப்பைத் தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த தமிழக அரசாங்கம் அவரசச் சட்டம் கொண்டு வந்துள்ளது.

திங்கள்கிழமை கூடிய சட்டப் பேரவைக் கூட்டத்தில் அந்த அவசரச் சட்டத்தைச் சட்டமாக நிறைவேற்றுவதற்கு வகை செய்யும் சட்ட முன்வடிவு (மசோதா) அறிமுகம் செய்யப்பட்டது.
இதனிடையில், போராட்டத்திற்கான குறிக்கோள் நிறைவேற்றப்பட்டதால், சென்னை மெரீனா கடற்கரையில் குவிந்துள்ள போராட்டக்காரர்களை அமைதியான முறையில் கலைந்து செல்லுமாறு ‌ காவல்துறை திங்கள்கிழமை காலையில் வேண்டுகோள் விடுத்தது.

இது குறித்து சென்னை காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், “போராட்டத்திற்கான நோக்கங்கள் நிறைவேறி விட்டதால் போராட்டக்காரர்கள் உடனடியாகக் கலைந்து செல்லும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவகதற்கு நிரந்தரமாக சட்டம் கொண்டுவரப்படும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் கூறினர்.

இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தாங்களாகவே கலைந்து செல்ல இளைஞர்களுக்கு காவல்துறை மீண்டும் அறிவுறுத்தியது. போராட்டக்காரர்கள் கலைவதற்கு மறுத்ததை அடுத்து காவல்துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனால், போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் கடலை நோக்கி சென்று கடலில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக சென்னை பட்டினப்பாக்கம் மக்களும் அவர்களுடன் கடலில் இறங்கி போராடி வருகின்றனர்.

மேலும் படிக்க