September 27, 2022
தண்டோரா குழு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காமராஜ் நகரைச்சேர்ந்தவர் ஹரீஷ். இவர் பி எஸ் சி ஐ டி பட்டப்படிப்பு படித்து முடித்துள்ளார். இவரின் தந்தை வேல்முருகன் பேருந்தில் நடந்துனராக பணிபுரிந்து வருகிறார். ஹரீஷ் இந்து இளைஞர் முன்னணியின் மேட்டுப்பாளைய நகரத்தலைவராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்றிரவு அவரது வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இண்டிகோ காரின் முன்பக்க கண்ணாடியை மர்ம நபர்கள் கல் வீசி உடைத்துள்ளனர்.இதனையடுத்து காலையில் காரை பார்த்த ஹரீஷ்,இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த மேட்டுப்பாளையம் காவல் துறையினர், கார் கண்ணாடி உடைந்த பகுதிகளை பார்வையிட்டு, அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.