• Download mobile app
25 Apr 2025, FridayEdition - 3362
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மேட்டுப்பாளையத்தில் காலி குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

May 18, 2017 தண்டோரா குழு

மேட்டுப்பாளையம் அறிவொளி நகர் பகுதியில் 10 நாட்களாக குடிநீர் வரவில்லை எனக் கூறி அதிகாரிகளை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட பொது மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை பகுதியில் கடந்த சில நாட்களாகவே குடிநீர் சரிவர வழங்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுக்குறித்து பல முறை அவர்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். நடவடிக்கை எடுப்பதாக கூறும் அதிகாரிகள் இதுவரை சரிவர குடிநீர் வழங்கப்படவில்லை.

இதனிடையே இன்று சிறுமுகை அறிவொளி நகர் பகுதியை சார்ந்த பொதுமக்கள் திடிரென மேட்டுப்பாளையம்-சிறுமுகை சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் சுமார் அந்த சாலையில் 1 மணி நேரம் வரை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மேட்டுப்பாளையம் வட்டாச்சியர் ரங்கராஜ் காவல் ஆய்வாளர் சுகவனம் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சுமார் 20நிமிடம் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனிடையே சாலை மறியலை சீர்செய்ய மேட்டுப்பாளையம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பொன்ராஜ்,வள்ளுவன்,கிறிஸ்டோபர்,கருப்பையன்,வெள்ளிக்கிரி தனிப்பிரிவு காவலர்கள் கண்ணன்,ராஜ் ஆகியோர் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க