• Download mobile app
25 Apr 2025, FridayEdition - 3362
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மேட்டுப்பாளையம் உதகை மலை ரயில் இன்று ஒரு நாள் ரத்து

September 5, 2022 தண்டோரா குழு

மேட்டுப்பாளையம் கல்லார் பகுதியில் பெய்த கன மழை காரணமாக குன்னூர் கல்லார் ரயில் நிலையங்களுக்கு இடையே மலை ரயில் பாதையில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததால் மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்ற மலை ரயில் மேற்கொண்டு செல்ல முடியாமல் மீண்டும் மேட்டுப்பாளையம் திருப்பியது.

இன்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்ட மலை ரயிலில் 180 சுற்றுலா பயணிகள் பயணம் செய்தனர் மலைரயில் போக்குவரத்து இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்த காரணத்தினால் இன்று பயணம் செய்த 180 பயணிகளுக்கும் பயண சீட்டுக்கான பணம் திருப்பி வழங்கப்பட்டுள்ளது. ரயில் மீண்டும் மேட்டுப்பாளையம் கொண்டுவரப்பட்டது.

மலை ரயிலில் பயணிக்கலாம் என்று ஆசையாக இருந்த சுற்றுலா பயணிகள் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனர்.

மேலும் படிக்க