• Download mobile app
19 Sep 2024, ThursdayEdition - 3144
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மோசமான கவனிப்பால் மலைப்பாம்பை டிப்ஸாக கொடுத்த வாடிக்கையாளர்.

March 24, 2016 http://www.breitbart.com

ஹிரோஷி மோடோஹஷி என்பவர் லாஸ் எஞ்சலில் உள்ள ஒரு ஹோட்டலில் 200 டாலருக்கு உணவு ஆடர் செய்துவிட்டு உணவருந்த சென்றுள்ளார். அப்போது அவர் வைத்ததிருந்த ஒரு குட்டி மலைப்பாம்பை எடுத்து அருகில் இருந்த மற்ற வாடிக்கையாளர்களிடம் காண்பித்துள்ளார்.

இதைக் கவனித்த கடை ஊழியர்கள் அவரை உடனடியாக வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் நடத்தை சரியில்லை எனக் கூறி அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் சிறிதுநேரம் கழித்து வந்த அவர் தன்னுடன் கொண்டுவந்திருந்த 13 அடி நீளமுள்ள மலைப்பாம்பை எடுத்து ஹோட்டலில் விட்டுவிட்டு கூலாக திரும்பிச்சென்றார். பின்னர் ஹோட்டல் நிர்வாகத்தினர் விலங்குகள் மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுத்தனர்.

அவர்கள் வந்து மலைப்பாம்பை மீட்டதோடு, மோடோஹஷியை கைது செய்தனர். பின்னர் அவரிடம் செல்லமாக வளர்க்கக்கூடிய பாம்பை வளர்க்க அனுமதி பெற்றுள்ளாரா எனச் சோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இது போல அனுமதியின்றி பல விலங்குகளை விற்றதற்காகக் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. பின்னர் அவருக்கு 15 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும் படிக்க