• Download mobile app
29 Apr 2025, TuesdayEdition - 3366
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ராஜினாமா செய்வாரா எடப்பாடி – கமல் சவால்

August 15, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் ஊழல்களும், குற்றங்களும் நடந்தும் எந்த கட்சியும் முதலமைச்சரை ராஜினாமா செய்ய சொல்லாதது ஏன்? நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் சமீபகாலமாக தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். குறிப்பாக தமிழக அரசை மீது் கமல் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில், கமல் இன்று முதல்முறையாக நேரடியாக முதல்வர் மீது ட்விட்டரில் அதிரடி கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதில் தமிழகத்தில் ஊழல் மலிந்து கிடக்கின்றன. முதல்வர் பதவி வகிப்பவர் ராஜினாமா செய்யும் அளவிற்கு மாநிலத்தில் ஊழல் குற்றங்கள் பெருகி மலிந்து கிடக்கிறது. இச்சூழலில் எந்த கட்சியும் ஏன் தமிழக முதலமைச்சரை ராஜினாமா செய்யச் சொல்லவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆட்சியில் தவறுகளும், ஊழலும் நடந்தால் மாநில முதல்வர் தார்மீக பொறுப்பேற்று பதவியிலிருந்து விலக வேண்டும். தமிழகத்தில் நடைபெற்று வரும் ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வருவாரா என நடிகர் கமல் சவால் விடுத்துள்ளார்.

மேலும் படிக்க