• Download mobile app
28 Apr 2025, MondayEdition - 3365
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரூ. 4 கோடி சம்பள் பாக்கி: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது வழக்கு தொடர்ந்த சிவகார்த்திகேயன் !

March 29, 2022 தண்டோரா குழு

₨4 கோடி சம்பள பாக்கியை தரக்கோரி தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு எதிராக நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

நடிகர் சிவரகார்திகேயன் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான படம் மிஸ்டர் லோக்கல். ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெறவில்லை.

மிஸ்டர் லோக்கல்’ படத்திற்கான
சிவகார்த்திகேயனுக்கு சம்பளம் ₨15 கோடியில் ஞானவேல்ராஜா ₨11 கோடி மட்டுமே கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில்,₨4 கோடி சம்பள பாக்கியை தரக்கோரி தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு எதிராக நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், சம்பள பாக்கியை தரும்வரை நடிகர்கள் விக்ரம் மற்றும் சிம்பு படங்களை விநியோகிப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.திரையரங்க மற்றும் ஓடிடியின் விநியோக உரிமைகளை உறுதி செய்ய ஞானவேல்ராஜாவுக்கு தடை விதிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார். சிவகார்த்திகேயன் மனு மீது மார்ச் 31ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

மேலும் படிக்க