• Download mobile app
23 Apr 2025, WednesdayEdition - 3360
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரேசன் கார்டுகளுக்கு டாட்டா..பாய்..பாய்

April 1, 2017 தண்டோரா குழு

நியாய விலை கடைகளில் குடும்ப அட்டைகளுக்கு பதிலாக நவீன ஸ்மார்ட் கார்டு வழங்கும் விழாவை இன்று(ஏப்ரல் 1) சென்னை கொரட்டூரில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

மறைந்த முன்னாள் முதலைமச்சர் ஜெயலலிதா தனது 2011-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் குடும்ப அட்டைகளுக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். இத்திட்டம் வருவதற்கு காலதாமதம் ஆன காரணத்தினால் குடும்ப அட்டைகளில் உள்தாள்களை ஒட்டியே ஆண்டுகள் கடந்தன.

இந்நிலையில், இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரூ. 330 கோடி செலவில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் திட்டத்தைத் சென்னையில் தொடங்கி வைத்தார்.

ஸ்மார்ட் கார்டு தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால், ஸ்மார்ட் கார்டு தயாரிக்கும் பணி இன்னும் நிறைவடையாத காரணத்தால் அனைத்து அட்டைதாரர்களுக்கும் உடனே வழங்க இயங்கவில்லை.

இதனிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில் “ஸ்மார்ட் கார்டு வரும் வரையில் பழைய அட்டைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் “ என்றார்.

மேலும் படிக்க