• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

லிப்டுடன் ரெடியானது பா.ஜ க பிரச்சார வேன்.

April 21, 2016 முகமது ஆசிக்

தமிழக பாரதிய ஜனதா கட்சி பிரச்சாரத்திற்காக கோவையில் தயாரான அதிநவீன சொகுசு வேன் இன்று சென்னைக்கு கட்சி நிர்வாகிகள் அனுப்பி வைத்தனர்.

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் வரும் மே 16ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நாளைத் துவங்க உள்ளது. இதையடுத்து அரசியல் கட்சித்தலைவர்கள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா, மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், த.மா.கா. தலைவர் வாசன் ஆகியோரும் தங்கள் கட்சி வேட்பாளரை ஆதரித்துத் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.

தற்போது வரை தங்கள் சுற்றுப்பயணத்தை துவங்காதவர்கள் தமிழக பாஜக கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராசன் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் மட்டுமே.

இந்நிலையில் தமிழக பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் டெல்லியில் இருந்து வரும் தலைவர்கள் தமிழகம் முழுவதும் இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளார். இதையடுத்து தமிழிசைக்காகவும் டெல்லியில் இருந்து வரும் தலைவர்களுக்காகவும் அதிநவீன வசதிகள் கொண்ட பிரச்சார வேன் ஒன்று கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் தயாரானது.

அந்த வாகனத்தை இன்று கோவையில் உள்ள பாஜக நிர்வாகிகள் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கமாக ஜெயலலிதா, கருணாநிதியின் வாகனங்கள் அதிநவீன வசதிகளுடன் கூடியதாக இருக்கும் இம்முறை தமிழிசையின் வாகனமும் அவ்வாறு தயாராகியுள்ளது.

வாகனத்தில் உள்ள வசதிகள்.

ஒரு ரோலிங் சேர், படுக்கை, நவீன கழிப்பிடம் போன்ற வசதிகளுடன், குளிர்சாதன வசதி, அதிநவீன சஸ்பென்சன் வசதிகள் என பல்வேறு நவீன வசதிகளுடன் இந்தப் பிரச்சார வாகனம் தயாராகியுள்ளது.

மேலும், வாகனத்தில் நடுவே உள்ள மேடை மீது நின்று சுவிட்ஸ் போட்டால் லிப்ட் மூலம் மேலே வந்து மேற்கூரை வழியாகப் பேசும் வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜெயலலிதாவிற்கு அடுத்து பிரச்சார வாகனத்தில் மேடைக்கு லிப்ட் வைத்து அமைப்பட்டது பா.ஜ.க விற்கு மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க