• Download mobile app
24 Apr 2025, ThursdayEdition - 3361
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

லோக்பால் சட்டத்தை மத்திய அரசு தாமதிப்பதில் எந்த நியாயமும் இல்லை – உச்சநீதிமன்றம்

April 27, 2017 தண்டோரா குழு

ஊழலை ஒழிக்க வகை செய்யும் லோக்பால் சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு தாமதிப்பதில் எந்த நியாயமும் இல்லை என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு நிறை வேற்றப்பட்டு 2014ம் ஆண்டு அமலுக்கு வந்த லோக்பால் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்து அதற்குரிய நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்,

லோக்பால் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர தாமதிப்பதில் எந்த நியாயமும் இல்லை.எதிர்க்கட்சி தலைவர் என்று யாரும் இல்லை என மத்திய அரசு கூறுவது ஏற்புடையதல்ல. தேவையெனில், எந்த கட்சி அதிக உறுப்பினர்களை கொண்டுள்ளதோ அந்த கட்சியின் தலைவரை எதிர்க்கட்சி தலைவராக நியமித்து லோக்பால் குழுத்தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க வேண்டும்.

மேலும் , உறுப்பினர்கள் நியமனத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அவருக்கான முக்கிய முன்னுரிமை இடம் இருக்க வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

மேலும் படிக்க