• Download mobile app
24 Apr 2025, ThursdayEdition - 3361
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வகுப்பறையில் இருந்து உலக அரங்கிற்கு செல்ல புதிய கல்விக் கொள்கை தேவைப்படுகிறது – தமிழிசை செளந்திரராஜன்

November 28, 2022 தண்டோரா குழு

கோவை சுகுணா பொறியியல் கல்லூரியில் 6வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் தெலுங்கானா மற்றும் பாண்டிச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

இவ்விழாவில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பேசுகையில்,

பொறியாளர்கள் என்றால் ஒவ்வொரு கருவியையை மிகவும் அழகாக வடிவமைக்க கூடியவர்கள். நம் திறமைகளை நிரூபிக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். கோவை மாநகரை நான் வணங்குகிறேன். கொரோனா காலகட்டத்தில் பிபிடி கிட்டை தயாரித்து கொடுத்ததில் கோவையின் பங்கு முக்கியமானது.நீங்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை கொடுப்பவர்களாக இருக்க வேண்டும். நிறைய படியுங்கள் உங்களை நீங்களே புதுப்பித்து கொள்ளுங்கள். எல்லாவற்றையும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ளுங்கள்.

வகுப்பறையில் இருந்து உலக அரங்கிற்கு செல்ல புதிய கல்விக் கொள்கை தேவைப்படுகிறது. புதிய சிந்தனைகளை கொண்டு வரவே தேசிய புதிய கல்விக் கொள்கையை பிரதமர் கொண்டு வந்தார். Start Up களில் இந்தியா உலக அரங்கில் 3 ஆம் இடத்தில் உள்ளது. மாணவர்கள் அதிகம் படிக்க வேண்டும். வாழ்க்கை வரலாறுகளை மாணவர்கள் படிக்க வேண்டும் என ஆளுநர் தமிழிசை அறிவுறுத்தினார்.

இவ்வாறு பேசினார்.

இவ்விழாவில்,227 மாணவர்கள் பட்டங்கள் பெற்றனர். சுகுணா குழுமங்களின் தலைவர் லட்சுமி நாராயணசாமி தலைமை உரையாற்றினார். கல்லூரி முதல்வர் வரவேற்புரை ஆற்றினார். சுகுணா அறக்கட்டளையின் செயலர்
ஸ்ரீகாந்த் கண்ணன் நன்றியுரை ஆற்றினார்.

மேலும், இவ்விழாவில் சுகுணா கல்வி குழுமங்களின் தலைவர் சுகுணா மற்றும் பேராசிரியர்கள், பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க