• Download mobile app
29 Apr 2025, TuesdayEdition - 3366
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வன உலக நாள்-கோவையில் கல்லூரி மாணவர்கள் பேரணி

March 21, 2022 தண்டோரா குழு

இன்று வன உலக நாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வனத்துறையினர் தனியார் அமைப்புகள் பள்ளி கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி கோவையில் வனத்துறை சார்பில் லாலிரோடு பகுதியில் உள்ள வன கல்லூரியில் தனியார் கல்லூரி (ரத்தினம் கல்லூரி) மாணவ மாணவிகள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் உலக வன நாள் குறித்து விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர்.இதனை கோவை மண்டல வன பாதுகாப்பு அலுவலர் ராமசுப்பு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த பேரணியானது அவிநாசி லிங்கம் கல்லூரி சாலை வழியாக மீண்டும் வன கல்லூரியை வந்தடைந்தது.அதனை தொடர்ந்து கோவை வனக்கோட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 15 அலுவலர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. அதனையடுத்து 6 மரக்கன்றுகள் நடப்பட்டன.

இந்நிகழ்வில் கோவை மாவட்ட வன அலுவலர் அசோக் குமார் மற்றும் முன்னாள் மாவட்ட வன அலுவலர் பத்ரசாமி கோவை வன கோட்டம் உதவி வன பாதுகாவலர் செந்தில் குமார் கோவை வனச்சரகர் அருண்குமார் வன உயிர் & இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை WNCT ஒருங்கிணைப்பாளர் சிராஜ்தின் மற்றும் ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆசிரியர் குரு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க