• Download mobile app
21 Apr 2025, MondayEdition - 3358
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வரி வசூலில் வடக்கு மண்டலம் முதலிடம் – மேயர் பெருமிதம்

May 31, 2023 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் வடக்கு மண்டலம் மன்ற கூட்டம் மண்டல தலைவர் கதிர்வேல் தலைமையில் மண்டல அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் சிறப்பு அழைப்பாளாராக கலந்து கொண்டார்.

கோவை மாநகராட்சியில் வரிவசூல் பணி தீவிரமாக நடைபெற்றது.இதில் கோவை மாநகராட்சியில் 94.86 சதவீதம் பெற்று வடக்கு மண்டலம் முதலிடம் பெற்றது.மேலும் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 4 வது வார்டு 99 சதவீதம் வரிவசூலில் முதலிடம் பெற்றது. இதை தொடர்ந்து வடக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் மற்றும் 4வது வார்டு பில் கலெக்டர் சதீஷ்யை பாராட்டினார்.

மேலும் வடக்கு மண்டலத்தில் மண்டல தலைவர் தலைமையில் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் மூலம் புதிய சொத்துவரி புத்தகம், பெயர் திருத்தம், தெருவின் பெயர் திருத்தம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றதையும் பாராட்டினார்.
இக்கூட்டத்தில் வடக்கு மண்டலத்திற்குட்பட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்களது வார்டு பகுதிகளில் உள்ள பிரச்சனைகள் குறித்து பேசினார்கள். அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என மண்டல தலைவர் உறுதி அளித்தார்.

இக்கூட்டத்தில் 26வது வார்டு கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி பேசுகையில்,

‘‘ஸ்ரீ ராம் நகர், முல்லை நகர் பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைத்து தர வேண்டும். மழைநீர் வடிகால்களை சுத்தம் செய்யும் போது அந்த மண்கள் ரோட்டில் வைக்கப்படுகின்றன. இதனை உடனடியாக அகற்றி தர வேண்டும். பொதுக்கழிப்பிடங்களில் விளக்குகள் சரியாக எரிவது இல்லை. பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்,’’என்றார்.

இக்கூட்டத்தில் உதவி கமிஷனர், பொறியாளர்கள், கவுன்சிலர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க