• Download mobile app
22 Apr 2025, TuesdayEdition - 3359
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வறட்சி பாதித்த பகுதிகளில் மத்திய குழு ஆய்வு

January 24, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் வறட்சி பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தி வரும் மத்திய குழுவினர் தஞ்சாவூர் உட்பட மூன்று மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விலை நிலங்களைப் பார்வையிட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்துப் போனதால் பெரும் வறட்சி நிலவுகிறது. வறட்சி பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய குழுவினர் தமிழகம் வந்துள்ளனர்.

தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநர் வசுதா மிஸ்ரா தலைமையிலான குழுவினர் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, வறட்சி பாதிப்பு குறித்து அவர்களிடம் விளக்கமளித்தார். மத்திய குழுவினர் பாதிப்பு குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தனர்.

இதில் ஏக்கருக்கு 25 ஆயிரம், தொழிலாளர்களுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை, உயிரிழந்த விவசாயிகளுக்கு 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்‌.மாநிலத்தில் வறட்சி பாதித்த அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொள்ளும் மத்திய குழு வரும் 25-ம் தேதி சென்னைக்குத் திரும்புகிறது.

மேலும் படிக்க