• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வாட்ஸ்ஆப் சேவை நிறுத்தம்.

May 3, 2016 theyeshivaworld.com

இன்று மக்கள் குறுஞ்செய்திகளை பகிர்ந்துகொள்ள உபயோகிக்கும் வாட்ஸ்அப் முறை மிகவும் பிரபலம். இதை வயது வித்தியாசமின்றி அனைவராலும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

செல் போன் வாங்கச் செல்லும் போது முதலில் கேட்கும் கேள்வி, அதில் வாட்ஸ்ஆப் இருக்கிறதா? அப்படி இல்லை என்றால் கைப்பேசி வாங்கியவுடன் இதை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து விடுகின்றனர்.

மக்களின் வாழ்கையில் வாட்ஸ்ஆப் இன்றியமையாத ஒன்றாகி விட்டது.

பல நாடுகள் இதை உபயோகித்து வந்தாலும், வாட்ஸ்ஆப்பால் பிரேசில் நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படுகின்றது என்பதால் அதற்குத் தடை விதித்துள்ளனர்.

மேலும், ப்ரேசில் நாட்டில் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நீதிப் போரின் விளைவாக வாட்ஸ்அப்பை உபயோகிக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ப்ரேசில் நாட்டின் வடகிழக்கு மாநிலமான செர்கிபே நீதிபதி திங்கள்கிழமை மாலை முதல் நாடு முழுவதும் 72 மணி நேரம் இந்தச் சேவையை நிறுத்த வேண்டும் என்று அவர் கட்டளையிட்டார்.

லத்தீன் அமெரிக்காவில் பேஸ்புக் நிறுவனத்தின் மூத்த பிரதிநிதியான டியாகோ டீசோடன் என்பவர்,

போதை மருந்து கடத்தல் மற்றும் திட்டமிட்ட குற்ற விசாரணைக்கு ஒத்துழைக்கத் தவறியதற்காக சண் பாலோ நகரத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

அவர் இந்த விசாரணை சம்பந்தமாக வாட்ஸ்ஆப் உபயோகிப்பவர்களைக் குறித்து தகவலைச் சட்ட அமலாக்கத் துறைக்கு கொடுக்கத் தவறியதற்காக ஒரு இரவு சிறையில் இருந்தார்.

மேலும் படிக்க