• Download mobile app
26 Apr 2025, SaturdayEdition - 3363
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வாட்ஸ் ஆப்பை பார்க்க முயன்ற கணவரை அரிவாளால் வெட்டிய மனைவி

June 12, 2017 தண்டோரா குழு

உத்திரப் பிரதேசத்தில் மனைவியின் வாட்ஸ் அப் சாட்டை பார்க்க முயன்ற கணவரை மனைவி அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ள பிலாவலி கிராமத்தில் வசித்து வருபவர் நேத்ரபால் சிங். இவருக்கும், நீது சிங் என்பவருக்கும் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து தனித்தனியே வாழ தொடங்கினர்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை நேத்ரபால் சிங் வீட்டில் நிகழ்ச்சி ஓன்று நடந்துள்ளது. இதில் கலந்து கொள்ள நீது சிங் அங்கு வந்துள்ளார். அப்போது நீது சிங் வாட்ஸ் அப்மூலம் வேறொருவருடன் சாட்டிங் செய்து கொண்டிருந்தார். இதனை கவனித்த நேத்ரபால் நீ யாருக்கு குறுஞ்செய்தி அனுப்புகிறாய், உனது ஃபோனை கொடு என கேட்டுள்ளார். ஆனால், நீது சிங் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கணவர் அவரது மனைவியிடம் இருந்து வலுக்கட்டாயமாக போனை பிடுங்கி பார்த்துள்ளார். இதனால் கடும் கோபமடைந்த மனைவி, அருகில் இருந்த அரிவாளை எடுத்து தனது கணவரை வெட்டியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த நேத்ரபால் உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும், பாதிக்கப்பட்டவர் தற்போது வரை காவல்நிலையத்தில் புகார் அளிக்காததால், நீதுவின் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க