• Download mobile app
16 Sep 2024, MondayEdition - 3141
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை வடக்கு மாவட்ட திமுக சிறுபான்மை அணி தலைவர் ஆரோக்கிய ஜான் அன்னதானம்.

September 7, 2024

தமிழகம் எங்கும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.கோவை வடக்கு திமுக மாவட்ட செயலாளர் தெ.அ.ரவி அவர்களின் வழிகாட்டுதல் படி கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு 100 கோவில்களில் அன்னதானம் வழங்குவது என சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் ஆரோக்கிய ஜான் கூறினார்.

அதனை தொடர்ந்து பல்வேறு கோவில்களில் அன்னதானம் வழங்கி வருகின்றார்.அதனை தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் சர்க்கார் சாமகுளம் பேரூராட்சி குரும்பபாளையம் வையாபுரி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி கணபதி விநாயகர் திருக்கோயில் பக்தர்களுக்கு சுமார் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு வடக்கு மாவட்ட சிறுபான்மை அணி வடக்கு மாவட்ட தலைவர் ஆரோக்கிய ஜான் அன்னதானம் வழங்கினார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

தமிழின தலைவர்,திமுக தலைவர் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நினைவு விழாவை முன்னிட்டு,100 கோவில்களுக்கு கோவை வடக்கு மாவட்ட திமுக சிறுபான்மை அணி சார்பில் அன்னதானம் வழங்க திட்டமிட பட்டது. கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொ.அ.ரவி அவர்களின் வழிகாட்டுதல் படி கோவை வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கோவில்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றோம்.

இதன் தொடர்ச்சியாக விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு இன்று எஸ்.எஸ்
குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வையாபுரி நகரில் உள்ள சக்தி கணபதி விநாயகர் திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. என் கூறினார்.

மேலும் படிக்க